×

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தது போலீஸ்..!!

டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று போலீஸ் கைது செய்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் முறையீடு செய்தனர். தேர்தல் நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையர்களிடம் வலியுறுத்தினோம் என திரிணாமுல் காங். எம்.பி தெரிவித்தார். ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாக திரிணாமுல் காங். எம்.பி. குற்றம்சாட்டினார்.

The post திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தது போலீஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Trinamool Congress ,Derrick O'Brien ,Delhi ,MPs ,Chief Election Commissioner ,
× RELATED டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையருடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு..!!